செம்மண்...
கனடாவின்
மொன்றியலில் இடம்பெற்ற செம்மண் இரவின் 25 ஆவது ஆண்டு வெள்ளிவிழாவில் கனடா
மதியன் அவர்களினால் வாசிக்கப்பட்ட கவிதை முக்கியத்துவம் கருதி இங்கே மீள்
பிரசுரமாகின்றது...
செம்மண் இன்று வெள்ளிவிழா
காண வித்திட்ட எங்கள்
முன்னோரைப் பாராட்டி அவர்கள்
எங்களுக்கு என்றென்றும் நல்வழி
காட்டியாக மிளிர அவர்களை வாழ்த்தி
வெள்ளிவிழா காணும் செம்மண்னை
போற்றி என் கவி தொடர்கிறது...
சொக்கவளவு சோதிவிநாயகர் துணையுடன்
விக்கினேஸ்வரா மத்திய மகாவித்தியாலயத்தை
மனதில் நிறுத்தி
சனசமூக நிலையத்தை இதயத்தில் போற்றி
வெள்ளி விழா காணும் செம்மண்ணே
நீ வாழ்க பல்லாண்டு...
ஊர் விட்டு வந்தோம்
உறவு விட்டு வந்தோம்
உந்தனது பாசம் மட்டும் எங்கள்
நெஞ்சினில் சுமந்து வந்தோம்
செங்கம்பள வரவேற்பு எம்
மண்ணில் வருவோர்க்கில்லை காரணம்
நாமில்லை எம் ம்ண்ணே செம்மண்
அதனால் தானே செம்மண் இன்று
25 ஆண்டு வெள்ளிவிழாவை புன்னனகயுடன்
வெற்றி வெள்ளிவிழாவாக கொண்டாடுகிறது..
பனை தென்னை தானே வளரும்
பக்குவமாய் நட்டெடுத்த புகையிலை
எம் மண் கதை சொல்லும்
அனைத்தையும் அழித்தொழிக்க இன்று
சிங்களம் கங்கணம் கட்டி நின்றும்
செம்மண் இடம் கொடாது செருப்படிபட்டு
கிடக்கிறது சிங்களம் எம் செம்மண்ணில்
முழத்துக்கு முழம் சிங்கள குடியேற்றம்
முட்டி மோத நாதியற்று எம் இனம்
எப்படியாதும் செந்தமிழன் சிதறடிப்பான்
சிங்களவன் கொடூரத்தை என்று
செம்மண்ணே நீ முழங்கு
உலகுக்கு ஒரு புன்னகை
உங்களுக்கு உபதேசம் யாருக்கு
சொல்லுவீர் உந்தனது சட்டதிட்டம்
சிங்களமே செந்தமிழனுக்கு நீ
செருப்பு என்பதை மறந்திடாதே...
பசி வயிற்றுடன் தமிழன் வாடிக்கிடந்தாலும்
தாய் மண்ணை காக்க செம்மண்ணில்
முளைக்கும் முள்ளுக்கிரையும் ஆட்டிலறியாக
மாறும் ஒரு நாள் என்பதை நீ மறந்திடாதே..
தென்னை மரத்தில் கூடு கட்டி வாழ்ந்த
சிட்டுகுருவியும் கூடு கட்ட இடமின்றி
தெருவோரம் பறக்கிறது...
பரம்பரையாக வாழ்ந்த தமிழன்
இன்று முட்கம்பி வேலிக்குள்
மழைக்கு முளைத்த காளான் போல்
இன்று எம் தாய் மண்ணில் சிங்கள குடியேற்றம்
இதை நீ பொறுப்பாயா செம்மண்ணே
நீ சொல்லு?
விடமாட்டோம் விடமாட்டோம்
இளையோர் கையில் தாய் மண்
பொறுப்பு உள்ளவரை விடமாட்டோம்
தலைவன் அவன் குரல் கேட்டால்
ஏ9 நெடுஞ்சாலையில் சனநெருக்கடி
என்ற செய்தி வரும்
அது தமிழன் என்று எண்ணிடாதே
எம் தாய் மண்ணே
வந்தேறு குடியாம் சிங்களவன்
தலை தெறிக்க ஒடும்
ஒட்டம் அது என்று புரிந்து
கொள் செம்மண்ணே
செம்மண்ணே நாங்கள் செத்து
மடிந்தாலும் எம் பின்னால் வரும்
அடுத்த சமுதாயம் உனக்கு
எடுக்கும் பொன்விழா அது
புலம் பெயர் மண்ணில் இல்லை
என்பதை நீ மறந்திடாதே
வாழ்க வாழ்க என்று
உம் மண்ணில் பிறந்த நாங்கள்
எம் இரு கரம் கூப்பி உன்னை
வணங்குகிறோம்...
செம்மண்ணே
நீ வாழ்க வளமுடன் பல்லாண்டு...
என்றும் அன்புடன் உங்கள் பைங்கிலிட்டி
மாக்கோனியின் தம்பி
கனடா மதியன்