குப்பிளான் வடக்கில் சூறாவளியால் பனை விழுந்ததில் முற்றாக சேதமடைந்த வீடு! (Photos)


குப்பிளான் வடக்கில் முத்தர் வளவுப் பிள்ளையார் கோவிலுக்கு அருகில் உள்ள இராசரத்தினம் பாக்கியநாதன் என்பவரது வீட்டின் மீது பனைமரம் விழுந்ததில் குறித்த வீடு முற்றாகச் சேதமடைந்துள்ளது. 

தெய்வாதீனமாக வீட்டில் இருந்த யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. மகேசன் மினி சூறாவளி காரணமாக பல இடங்களில் பலத்த காற்று வீசியதில் மரங்களும் முறிந்து விழுந்தன. 

மின்சாரமும் தடைப்பட்டு இருந்தது.  இன்று (13/05/2013) காலை 6.35 மணியில் இருந்து காலை 6.55 மணிக்கும் இடைப்பட்ட வேளை, மினி சூறாவளி ஏற்பட்டதினால் யாழ்ப்பாணத்திலும் பரவலாக அனர்த்தங்கள் ஏற்பட்டன. 




 
Make a Free Website with Yola.