திருமதி மனோன்மணி நடராஜா
தோற்றம் : 15 ஒக்ரோபர் 1936 மறைவு : 22 டிசெம்பர் 2011
குப்பிளானை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மனோன்மணி நடராஜா அவர்கள் 22-12-2011 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலம்சென்றவர்களான தம்பிமுத்து, செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நடராஜா அவர்களின் அன்பு மனைவியும், பராசக்தி, காலம்சென்ற கந்தசாமி மற்றும் பானுமதி(திரவியம்), கதிரமலை(ராசு), லோகநாதன்(டென்மார்க்) ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்றவர்களான அன்னம்மா, பீதாம்பரம், தங்கம்மா, வேலைய்யா, பர்வதம் இரத்தினம், இரத்தினம் வல்லிபுரம் மற்றும் கணேசலிங்கம்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும், வீரசிங்கம், நவரத்தினம், காலம்சென்ற சீதா மற்றும் ராசாத்தி, விக்னேஸ்வரி(விக்கி - டென்மார்க்) ஆகியோரின் அன்பு மாமியாரும், காலம்சென்ற சிவனடியார் மற்றும் அருளம்மா(சுவிஸ்) அவர்களின் அன்பு மைத்துனியும் ஆவார். அன்னாரின் பூதவுடல் 23-12-2011 வெள்ளிக்கிழமை அன்று குப்பிளான் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
தகவல் |
லோகநாதன் Updated 24-12-2011 |
தொடர்புகளுக்கு | ||||||||||||||||
|