குப்பிளான் விக்கினேஸ்வரா முன்பள்ளியின் சீருடை வழங்கும் நிகழ்வும் பெற்றோர் சந்திப்பும்! 

குப்பிளான் விக்கினேஸ்வரா சனசமுக நிலையத்தினால் நடாத்தப்படுகின்ற முன்பள்ளி சிறார்களுக்கான சீருடை வழங்கும் நிகழ்வும் பெற்றோர் சந்திப்பும் முன்பள்ளி கட்டிடத்தில் சனசமுக நிலைய தலைவர் வ.தமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெற்றது. 


முதலில் வ.தமிழ்ச்செல்வன் அவர்களின் தலைமை உரையுடன் நிகழ்வு ஆரம்பமாகியது. 


தொடர்ந்து சனசமுகநிலைய செயலாளர் இ.நிரூபன் முன்பள்ளி செயற்பாடு தொடர்பான கருத்துரைகளை வழங்கியதுடன் பெற்றோரிடம் இருந்து சிறார்களுக்கான தேவைகள் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாக கருத்துக்களும் பரிமாறப்பட்டது. 


இவ் நிகழ்வில் சுவிஸ் நாட்டில் வசிக்கும் குப்பிளானை சேர்ந்த அருணகிரிநாதன் அருணாச்சலம் அவர்களால் நன்கொடையாக வழங்கப்பட்ட 15000 ரூபா பெறுமதியான சீருடைகள் முன்பள்ளி சிறார்களுக்கு வழங்கப்பட்டது. 




தொடர்ந்து சிறார்களுக்கான சிற்றுண்டிகளும் குளிர்பானங்களும் வழங்கப்பட்டது. 

பின்னர் பெற்றோர்களால் சீருடை தைப்பதற்கான பணத்தை வழங்கிய அருணகிரிநாதன் அருணாச்சலம் அவர்களுக்கும் இதற்கான ஆதரவு நல்கிய வெளிநாட்டில் வசிக்கின்ற முன்னாள் குப்பிளான் விக்கினேஸ்வரா சனசமுக நிலைய உறுப்பினர்கள் மற்றும் குப்பிளான் நண்பர்களின் சர்வதேச வலையமைப்பு உறுப்பினர்களுக்கும் தமது நன்றிகளை தெரிவித்தனர். 


இறுதியாக செயலாளரின் நன்றி உரையுடன் சந்திப்பு நிறைவு பெற்றது. 



- நன்றி - குப்பிளான் விக்கினேஸ்வரா சனசமூக நிலைய தகவல் பிரிவு -


 
Make a Free Website with Yola.