ஈழக் கதைக் களத்தைக் கொண்ட சந்தோஷ் சிவனின் 'இனம்' திரைப்படத்தில் நடிக்கும் யாழ். குப்பிளானைச் சேர்ந்த ரவியன், ஜெயந்தி தம்பதிகளின் பிள்ளைகள் (Photos)


இந்தியாவே கொண்டாடும் ஒளிப்பதிவு இயக்குனர் சந்தோஷ் சிவன். மிகச்சிறந்த ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குனராக அறிமுகமாகி ஹிட் படங்களை கொடுத்தவர்.

ரோஜா, இருவர், ராவணன், துப்பாக்கி போன்ற புகழ் பெற்ற தமிழ் படங்களிற்கும், அசோகா, டில்சே போன்ற புகழ் பெற்ற ஹிந்தி திரைப்படங்களிற்கும் ஒளிப்பதிவு இயக்குனராக தனது முத்திரையைப் பதித்தவர்.

இவர் தனியே ஒளிப்பதிவு இயக்குனர் மாத்திரம் அல்ல மல்லி, உறுமி, அசோகா போன்ற புகழ் பெற்ற படங்களின் இயக்குனரும் ஆவார்.

இவர் ஈழப் பிரச்சனையை, ஈழ மக்களின் அவலத்தை “இனம்” என்ற தலைப்பில் படமாக்கியுள்ளார்.

அரவிந்தசாமி, சரிகா, கருணாஸ் நடித்த இத் திரைப்படம் மிக விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

ஈழப் போரால் அநாதையான சிறுவர்களைப் பற்றிய இந்த திரைப்படத்தில் யாழ்ப்பாணம், குப்பிளானைச் சேர்ந்த திரு ரவியன் ரவிக்குமார், ஜெயந்தி தம்பதிகளின் மூன்று பிள்ளைகளான பிருத்திகா, பிரஜன், பிஜனன் ஆகியோர் மிக முக்கிய கதா பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படம் முழுவதும் வரும் இவர்கள் படத்தை தாங்கிச் செல்லும் பிரதான தூண்களாக படத்தில் நடித்துள்ளனர்.

ஈழத்தைச் சேர்ந்த சிறுவர்கள் இந்தியாவே கொண்டாடும் இயக்குனரின் படத்தில், மிக முக்கிய பாத்திரத்தில் நடிப்பது என்பது நிச்சயம் ஈழத் தமிழர்கள் அனைவருமே பெருமை கொள்ள வேண்டும்.

குழந்தை நட்சத்திரங்களாக இந்திய சினிமாவில் மிளிர இருக்கும் ஈழத்தின் குழந்தைகளை நாங்களும் வாழ்த்துவோம்.





 
Make a Free Website with Yola.