தொடர்ச்சி...

குப்பிளான் சந்தி வெறுஞ்சந்தியாச்சய்யா!




படித்தவரும் பாமரரும் பேதமின்றிக் கூடிநிற்பர் 
மது அருந்தி வந்தோரும் மறைந்தங்கு சேர்ந்திருப்பர்
களைத்துவரும் கமக்காரர் களைப்பாற அமர்ந்திருப்பார் 
இளவயதுக் கற்பனையில் இளைஞர் பலர் கூடி நிற்பார் - ஆனாலும் 
ஏழை செல்வன் பேதமின்றி எல்லோரும் அங்கிருப்பர்
குழப்ப நிலை வந்தாலும் 
குறையின்றி தீர்க்கவொரு கூட்டமொன்று அங்கிருக்கும் 
அன்று கண்டநிலை இன்று எப்படித்தான் மறைந்ததைய்யா
நாய் கூட இல்லாத வெறுஞ் சந்தி ஆச்சுதையா!

கவியாக்கம் - திரு. இ. சி. தெட்சிணாமூர்த்தி,
கிராம உத்தியோகத்தரும் சமாதான நீதவானும்,
குப்பிளான்.


 

 
Make a Free Website with Yola.