சின்னம் சிறு பாலகனின் மரணத்தால் சோகத்தில் ஆழ்ந்துள்ள குப்பிளான் கிராமம்!


குப்பிழானை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சின்னம் சிறு பாலகனான மகேஸ்வரராஜ் விஸ்னுராஜ் இன்று 11-01-2012 புதன்கிழமை அகால மரணமடைந்துள்ளார்.

இவர் பிரபல கல்வியலாளரும் சமூக சேவையாளருமான மகேஸ்வரராஜ் (செல்வம்) அவர்களின் பாசத்துக்குரிய புதல்வனும் காலஞ் சென்ற கந்தலிங்கம் அவர்களின் பேரனும் ஆவார்.

பாலகனுக்கு தற்போது ஒன்றரை வயது தான் ஆகின்றது. இன்று காலை எட்டு மணியளவில் குப்பிளானில் உள்ள வீட்டில் தண்ணீர் வாளியொன்றில் தவறி வீழ்ந்தே உயிரிழந்துள்ளார்.

பாலகனின் பூதவுடல் யாழ் போதனா வைத்தியசாலையில் இருந்து பிரேத பரிசோதனையின் பின்னர் இன்று மாலை ஆறு மணியளவில் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

துயரச் செய்தி கேட்டு குப்பிளானில் உள்ள சின்னம் சிறு பாலகனின் வீட்டில் ஏராளமான மக்கள் குவிந்த வண்ணம் உள்ளார்கள்.

பாலகனை இழந்த சோகம் தாங்காது அங்கு வரும் எல்லோரும் கதறி அழுதவண்ணம் உள்ளார்கள்.

பாலகனின் மரணச் செய்தியை ஏற்க முடியாமல் குப்பிளான் கிராமமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

பாலகனின் மறைவையொட்டி குப்பிளான் விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழகம் வெளியிட்டுள்ள நினைவு அஞ்சலி...



 
Make a Free Website with Yola.